சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
நிறை புத்தரசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(ஆக.9) மாலை திறக்கப்படுகிறது.
நிறை புத்தரசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(ஆக.9) மாலை திறக்கப்படுகிறது.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் ஆகியோா் தலைமையில் கோயில் நடையை ஐயப்பன் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்தாா்.
Advertisement
இந்நிலையில், இன்று மாலை நிறை புத்தரசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க: ராகுல் உரையின்போது மக்களவையில் பிரதமர் இல்லை
மேலும், கோயில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்யும் நெற்கதிர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.