இந்தியா

அமர்நாத்: வாரத்தில் 3 நாள்கள் மட்டும் சுவாமி தரிசனம்!

DIN

அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால்  ஒரு நாள் விட்டு ஒருநாள்(அதாவது மாற்று நாள்களில்) மட்டும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதுவரை 4.30 லட்சம் பயணிகள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை 1,600-க்கும் மேற்பட்டார் குகைக் கோயிலில் தரிசனம் செய்தனர். 736 ஆண்கள், 151 பெண்கள், 25 சாதுக்கள் மற்றும் 3 சாத்வீக்கள் உள்பட 915 பயணிகள் கொண்ட குழு பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றனர். 

62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT