கோப்புப்படம் 
இந்தியா

ஹிமாசல் நிலச்சரிவில் 6 வயது சிறுவன் பலி: நெடுஞ்சாலை மூடல்! 

ஹிமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ஹிமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 வயது சிறுவன் பலியானான். 

குலு மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது கற்கள் மற்றும் பாறைகள் விழுந்தது. இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மண்டி மாவட்டத்தின் சுந்தர்நகரைச் சேர்ந்த குடும்பத்தினர் குலுவில் இருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

சோலன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை-5 இல் உள்ள சிம்லா-கல்கா நெடுஞ்சாலை மூடப்பட்டது. மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT