மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, நால்வர் காயம்!
மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் லாரி டிவைடரில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் லாரி டிவைடரில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
மும்பை-புணே விரைவுச் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி டிவைடரில் மோதி அங்கிருந்த 5 கார்களின் மீது மோதியது. மாவட்டத்தின் கோபோலி பகுதியில் காலை 9 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 5 கார்கள் கண்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கியதாகவும், இதில் ஒரு பெண் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.