மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை கோவாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று மாலை மாநில அரசு வழங்கும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்கிறார்.
புதனன்று கோவா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் முர்மு கலந்துகொண்டு உரையாற்று உள்ளார். மேலும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு உறுப்பினர்களுடன் உரையாடுகிறார்.
பின்னர், போர்வோரிமில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் கோவா சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர் உரையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.