முகப்பு
இந்தியா

பஞ்சாபில் ஆக.26 வரை பள்ளிகள் மூடல்!

பஞ்சாப் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. 

Updated On : 23 ஆகஸ்ட், 2023 at 3:34 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. 

பஞ்சாப் மற்றும் ஹிமாசலில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. இதையடுத்து, பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படும் என அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.