பஞ்சாப் மாநிலம் சங்குரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில், விடுதி உணவகத்தில் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டன .
விடுதி உணவுக்கான பொருப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையிலிருந்து 14 மாணவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் 4 மாணவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
விடுதியிலிருந்து உணவுப்பொருள்களின் மாதிரியும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். உணவுத் தரம் குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்ததாக மாணவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.