இந்தியா

ம.பி.யில் வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்!

காலை 11 மணி நிலவரப்படி 155 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

DIN


மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தில் வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  

இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பம் முதலே ஆளும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக 155 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 68 இடங்களிலும், பிஎஸ்பி ஓரிடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

மத்தியப் பிரதேசத்தில் தற்போதுவரை 48.59 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 40.42 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT