முகப்பு
இந்தியா

15 வயது சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது வழக்கு!

பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூர் மாவட்டத்தில், 15 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தடகள வீரராக பயிற்சி பெற்று வரும் 15 வயது சிறுமி, கடந்த நவ.30 அன்று மாலையில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 இளைஞர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அந்த நால்வரும் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருளினைக் கொடுத்து பின் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

குற்றவாளிகளின் மேல் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.