கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!
கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) சோதனை நடத்தியது.
கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) சோதனை நடத்தியது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள சிலர் கர்நாடகம், மஹாராஷ்டிரத்தில் வசித்துவருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் இன்று காலை முதல் புணேவில் 2 இடங்களிலும், தாணே கிராமத்தில் 31 இடத்திலும், தாணே நகரில் 9 இடத்திலும், பயந்தரில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.