சத்தீஸ்கரின், நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலுக்கு ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் கோமல் மஞ்சி எனத் தெரிய வந்ததுள்ளது. சோடெடோங்கர் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் பூஜைகளை முடித்து வீடு திரும்பியபோது நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டு, கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இவருக்கு நல்சல்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், அங்கு நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.