FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எது உண்மையான வளர்ச்சி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டு உண்மையான வளர்ச்சி எது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 10 டிசம்பர் 2023, 2:55 pm IST
பகிர்:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டு உண்மையான வளர்ச்சி எது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, “2023 ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டு புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ‘இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி’ அதிகரித்துள்ளதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.

காலாண்டு வளர்ச்சி விகிதமானது பல்வேறு காரணங்களுக்காக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். எனவே அதனை ஒதுக்கி வைத்து விடலாம். பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதைவிட முக்கியமானது என்னவென்றால், நீண்ட காலத்திற்கான ஆண்டு வளர்ச்சி விகிதங்கள்.

Advertisement

Advertisement

பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதைவிட முக்கியமானது என்னவென்றால், நீண்ட காலத்திற்கான ஆண்டு வளர்ச்சி விகிதங்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8.1% ஆகும்.

தற்போது நரேந்திர மோடி பிரதமராக இருக்கும்போது ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.4% ஆக உள்ளது.

அப்படியானால் எது உண்மையான வளர்ச்சியாகும்?” என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments