இந்தியா

உலகளாவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் பிரியங்கா!

காஸாவில் போர் நிறுத்தம் கோரி உலகளாவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தியுள்ளார். 

DIN

காஸாவில் போர் நிறுத்தம் கோரி உலகளாவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தியுள்ளார். 

பாலஸ்தீன மக்களின் படுகொலையை தடுக்க காஸாவில் போர் நிறுத்தம் கோரி இன்று உலகளாவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா மக்களை வலியுறுத்தினார். 

இதுதொடர்பாக பிரியங்கா தனது எக்ஸ் பதிவில், 

காஸாவில் போர் நிறுத்தம் கோரி உலகளாவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவும். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடூரமான அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். 

காஸா மீதான இரக்கமற்ற குண்டு வெடிப்பு போர் நிறுத்தத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் கடமை எதுவோ அதைச் செய்வது நல்லது என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் பலமுறை போர்நிறுத்தம் கோரி பிரியங்கா காந்தி குரல் கொடுத்து வருகிறார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இறந்ததை அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஹமாஸில் அக்டோபர் 7-ம் தேதி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

SCROLL FOR NEXT