இந்தியா

பிரதமரை சந்திக்கவுள்ள மம்தா பானர்ஜி; காரணம் என்ன?

DIN

மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியளிப்பதை நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க வேண்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில், மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மற்றும் மம்தா பானர்ஜியின் சந்திப்பு வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

SCROLL FOR NEXT