இந்தியா

தாவூத் இப்ராஹிமுக்கு விஷம் வைக்கப்பட்டதா?

DIN

மும்பையின் தாதாவான தாவூத் இப்ராஹிம் கடந்த பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கிறார். 

மும்பையில் 1993 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 250 -க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உலகளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். 

தொடர்ந்து, இந்திய அரசின் மிக முக்கியமான தேடப்படும் குற்றவாளியான பின், தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் துபை மற்றும் பாகிஸ்தானில் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், இவரது மருமகன், தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மர்ம நபர் ஒருவரால் தாவூத் இப்ராஹிமுக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட அவர் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகவல் குறித்த எந்த வித ஆதாரமான செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

பொதுத் தோ்வு: மாநிலத் தரவரிசையில் பின்தங்கும் நாமக்கல் மாவட்டம்

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

பொறியாளா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

SCROLL FOR NEXT