மக்களவையில் தொடர்ச்சியாக எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்தியா கூட்டணியில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
குளிர் கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான காங்கிரஸின் உறுப்பினர்களில் சோனியா காந்தி, ராகுல் உள்பட 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை 49 எம்.பிக்கள் மக்களவையின் நெறிகளை மீறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதோடு ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 138. இவர்களில் 43 பேர் மட்டுமே அவையில் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ராஜன் செளத்ரி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
திரிணமூல் எம்பிக்கள் 22 பேரில் 13 பேரும் திமுகவின் எம்.பிக்கள் 24 பேரில் 16 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மியின் ஒரேயொரு உறுப்பினர் சுஷில் குமார் ரின்கு மற்றும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர். சிவ சேனை உறுப்பினர்கள், முஸ்லீம் லீக், விசிக, ஆர்எஸ்பி உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இல்லாத போதும் அந்தக் கட்சியின் உறுப்பினர் தனீஷ் அலி நீக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.