விவசாயத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது: அர்ஜூன் முண்டா
வேளாண் துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா இன்று தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: வேளாண் துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா இன்று தெரிவித்துள்ளார்.
அக்ரிகல்ச்சர் டுடே குழுமம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முண்டா மேலும் தெரிவித்ததாவது:
சந்தேகத்திற்கு இடமின்றி நமது விவசாயத் துறை வேகமாக வளர்ந்து முன்னேற்றமும் அடைந்து வருகிறது. முயற்சிகளை மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். அதே வேளையில் இறக்குமதியை குறைப்பதோடு, ஏற்றுமதியை அதிகரிக்கவும் வேண்டும என்று முண்டா வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் விவசாயத் துறையில் நாடு தன்னிறைவு அடைய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.