இந்தியா

கர்நாடகம்: வெறிநாய் கடித்ததில் 25 பேர் காயம்; 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்

DIN

கர்நாடகத்தில் வெறிநாய் கடித்ததில் 25 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவண்டி கிராமத்தில் வெறிநாய் ஒன்று பொதுமக்கள் துரத்தி, துரத்தில் கடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த உள்ளூர் அதிகாரிகள் காயங்களுடன் நாயை பிடித்தனர். 
இருப்பினும், அந்த நாய் பின்னர் இறந்தது. நாய் கடியால் காயமுற்ற  எட்டு பேர் மாவட்ட மருத்துவமனையிலும், மற்றவர்கள் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நான்கு வயது சிறுமி உள்பட 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. 
வெறிநாய் கடிக்கு 25 பேர் காயமுற்ற சம்பவம் கொப்பல் மாவட்டத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT