இந்தியா

அரபிக் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

DIN


துபை: அரபிக் கடல் பகுதியில், வணிகக் கப்பல் ஒன்றின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்வி செம் ப்ளூட்டோ எனப்படும் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் கப்பலில் தீப்பிடித்ததாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

லைபீரிய நாட்டுக் கொடியுடன், கச்சா எண்ணெய் அல்லது ரசாயன டேங்கர் ஏற்றப்பட்ட, இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிகக் கப்பல் ஒன்று சௌதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில், அரபிக் கடல் பகுதியில் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த வணிகக் கப்பலானது மங்களூருக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT