நாக்பூர்: நாக்பூரில் 4 மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்ததால் மன உளைச்சலில் இருந்த 32 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த நபர் பர்தோடி வக்கீல் கிராமத்தில் வசிக்கும் அமோல் கோண்டுலே என்று அடையாளம் காணப்பட்டதாக சாவ்னர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மனைவி இறந்த பிறகு மதுவுக்கு அடிமையான அமோல் நேற்று பிற்பகலில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.