முகப்பு
இந்தியா

புதிதாக 628 பேருக்கு கரோனா தொற்று; ஒருவா் உயிரிழப்பு

நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில்  628 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காரணமாக கேரளத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். 

Updated On : 25 டிசம்பர் 2023, 12:59 pm IST
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில்  628 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காரணமாக கேரளத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். 

கடந்த வியாழக்கிழமை தேசிய அளவில் 358 பேருக்கும், கேரளத்தில் மட்டும் 300 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மற்றும் கேரளத்தில் 3 போ் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 752 பேருக்கு கரோனா தொற்று  பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில்  628 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக் காரணமாக கேரளத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு 4,054 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாடு முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 4,50,09,248 (4.50 கோடி) ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,44,71,860 (4.44 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தேசிய மீட்பு விகிதம் 98 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 5,33,334 (5.33 லட்சம்) பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை 220.67 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சக இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments