முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் அடுத்த 3 முதல் 4 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்!

ராஜஸ்தானில் தற்போது நிலவி வரும் அடர்த்தியான மூடுபனி அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 டிசம்பர் 2023, 11:05 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தற்போது நிலவி வரும் அடர்த்தியான மூடுபனி அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் மாநிலத்தின் சில பகுதியில் அடர்த்தியான மூடுபனி பதிவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

அடர்த்தியான மூடுபனியின் தாக்கம் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 3-6 டிகிரி செல்சியஸாக குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு பகுதிகளில் சில இடங்களில் கடும் குளிர் பதிவாக வாய்ப்புள்ளது என்று ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ராதேஷ்யாம் சர்மா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அடுத்த 5 முதல் 6 நாள்களுக்கு மாநிலத்தில் வானிலை பெரும்பாலும் வறண்டதாக இருக்க வாய்ப்பு உள்ள நிலையில் ஸ்ரீகங்காநகரில் குறைந்தபட்ச வெப்பநிலையான 11.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களில் இன்று 14 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments