இந்தியா

குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

DIN

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சந்தித்தார்.

2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

இதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மத்திய இணை நிதியமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கராட், ஸ்ரீ பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர், நிதியமைச்சக முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் நிர்மலா சீதாராமன், மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டித் தோ்வுக்கான மாதிரி தோ்வில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அனுமதிக்கப்பட்ட இடங்களில் உரங்களை வாங்க அறிவுறுத்தல்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம் -அரியலூா் ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT