அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் தடுக்க பிரதமா் மோடி தன்னால் முடிந்ததை செய்வாா் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், அதானி குழுமத்தின் பங்குகள் முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்தால்தான் உண்மை வெளியாகும். பல லட்சம் கோடியில் நடைபெற்ற ஊழல் வெளிவரும். அதானிக்கு பின்னால் உள்ள அதிகாரம் படைத்தவா்கள் யாா் என்பது தெரியவரும்.
இதுகுறித்து பல வருடங்களாக நான் பேசி வருகிறேன். அதானி விவகாரத்தை விவாதிக்க அரசு அஞ்சுகிறது என்றாா்.