விரைவில் பயன்பாட்டில்.. க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரம் 
இந்தியா

விரைவில் பயன்பாட்டில்.. க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரம்

மக்களிடையே சில்லறை புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பொதுவிடங்களில் க்யூஆர்  கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

DIN


மக்களிடையே சில்லறை புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பொதுவிடங்களில் க்யூஆர்  கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் முதற்கட்டமாக 12 நகரங்களி, சில்லறை நாணயங்கள் மட்டுமே வழங்கும் இயந்திரங்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், சந்தைப் பகுதிகளில் வைக்கப்படவிருக்கின்றன.

வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடான சில்லறை நாணயங்களை வழங்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்படும்.

இதில், வடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு எந்த மதிப்புள்ள நாணயம், எத்தனை வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சோதனை முறையில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்த திட்டம் வெற்றிபெற்றால், அது விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்து வீரர்கள் சொதப்பல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

புதிய விதிகள்... துபை... சரண்யா ஷெட்டி!

நிறங்கள்... அனுஷ்கா சென்!

‘மோந்தா’ புயல் ஒடிஸாவைத் தாக்கலாம்: 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

SCROLL FOR NEXT