பிபிசி சோதனை குறித்து காங்கிரஸ் கருத்து 
இந்தியா

விமரிசனங்களைக் கண்டு பயப்படும் மத்திய அரசு: பிபிசி சோதனை குறித்து காங்கிரஸ்

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு பயப்படுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

DIN


புது தில்லி: பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு பயப்படுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்  கே.சி. வேணுகோபால் கூறுகையில், தில்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருவது, மோடி தலைமையிலான மத்திய அரசு விமரிசனங்களைக் கண்டு பயப்படுவதைத்தான் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மிரட்டும் வகையில் மத்திய அரசு செயல்படும் விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகாரப் போக்கை இனியும் தொடர முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

பிபிசியின் மும்பை மற்றும் தில்லி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT