இந்தியா

தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது!

தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது பீபிநகர் என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பயணிகள் அனைவரும் காயமின்றி நலமுடன் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோதாவரி ரயில் தடம் புரண்டதால், அவ்வழியாக செல்லக் கூடிய ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் புவனகிரி, பீபிநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT