இந்தியா

பாதுகாப்புக்கான செலவை உயர்த்திய மெட்டா சிஇஓ!

DIN

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அவருடைய பாதுகாப்புக்கான செலவினத்தை உயர்த்தி உள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் சுமார் 11,000 பணியாளர்கள்  பணிநீக்கத்தைத் தொடர்ந்து, அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பாதுகாப்பு செலவினத்துக்காக $4 மில்லியன் டாலரை அதிகரித்துள்ளார்.

ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவினத்துக்காக $10 மில்லியன் டாலரில் இருந்து $14 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியது.

அந்த அறிக்கையின்படி, "ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவினத்துக்கான தற்போதைய அதிகரிப்பு, இந்த சூழ்நிலையில் பொருத்தமானது மற்றும் அவசியமானது" என்று மெட்டா கூறியுள்ளது.

இந்த ஆண்டின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் மெட்டாவின் முகநூல் நிறுவனம் சுமார் 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. மெட்டா பணி நீக்கங்கள் நவம்பர் 2022 இல் நடந்தன.

மேலும் இந்த பணிநீக்கங்கள் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய பணிநீக்கங்களாக அறியப்பட்டன. மெட்டா நிறுவனம் விரைவில் இரண்டாவது சுற்று பணிநீக்கங்களை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT