ஷீரடிக்கு விரைவில் இரவு விமான சேவை
மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஷீரடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் சேவை மேற்கொள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ள மக்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலைத் தரிசிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை-ஷீரடி இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த நிலையில், விமான சேவைக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது. அடுத்த மாதத்திலிருந்து இது அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.