இந்தியா

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்:  மார்ச் 1 முதல் முகத்தை அடையாளம் காணும் முறை அறிமுகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடையாளம் காண்பதற்காக, மார்ச் 1 ஆம் தேதி முதல் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் அமல்

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடையாளம் காண்பதற்காக, மார்ச் 1 ஆம் தேதி முதல் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் அமல்படுத்த இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். 

இதனைத் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது ஆகியவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இந்த தொழில்நுட்பத்தை வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் நிரந்தரமாக அமலுக்கு கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும். ஒரு பக்தர் அதிக டோக்கன்கள் வாங்குவதைத் தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட இருப்பதாகவும், "இலவச தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது, வருகை தரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவைகளை வழங்குவதாகும்"  என்று  தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT