நொய்டாவில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர். 
இந்தியா

கிரேட்டர் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கைகலப்பு: 4 பேர் காயம்

கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்தனர்

DIN

கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்தனர் என்று கௌவுதம் புத் நகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிஸ்ராக் காவல் நிலையத்திற்குட்பட்ட கௌர் நகரில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுயபடம் (செல்ஃபி) எடுப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இரு குழுக்களும் டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தில் காயமடைந்த 4 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க உத்தரபிரதேச காவல்துறை பல உத்தரவுகளை பிறப்பித்தது.

இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் மாநில தலைநகரான லக்னௌவில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டின் ஞாபகம்: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!

தி ராஜாசாப் படத்தின் விடியோ பாடல்!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை: 2026 இறுதிக்குள் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அமல்!

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

SCROLL FOR NEXT