நொய்டாவில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர். 
இந்தியா

கிரேட்டர் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கைகலப்பு: 4 பேர் காயம்

கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்தனர்

DIN

கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்தனர் என்று கௌவுதம் புத் நகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிஸ்ராக் காவல் நிலையத்திற்குட்பட்ட கௌர் நகரில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுயபடம் (செல்ஃபி) எடுப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இரு குழுக்களும் டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தில் காயமடைந்த 4 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க உத்தரபிரதேச காவல்துறை பல உத்தரவுகளை பிறப்பித்தது.

இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் மாநில தலைநகரான லக்னௌவில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

செல்ஃபி ஸ்மைல்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT