இந்தியா

அணுமின் நிலையங்கள் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

DIN

அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அணுசக்தித் துறையில் பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்களைக் கட்டமைப்பதற்கு நிதி ஆதாரங்களை உருவாக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அடிமட்ட அளவுக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடையும் நோக்கில், அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

தற்போது வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அணுமின் நிலையங்களை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது என்று தெரிவித்தாா்.

இந்தியாவில் தற்போது உள்ள அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறன் 6,780 மெகா வாட்டாக உள்ளது. இந்நிலையில், 2031-ஆம் ஆண்டுக்குள் மேலும் 21 அணுமின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றின் மூலம் கூடுதலாக 15,700 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்ஸ் லீக்: அடுத்த சுற்றுக்குத் தேர்வான, வெளியேறிய அணிகளின் விவரங்கள்!

மும்மூர்த்திகள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

SCROLL FOR NEXT