இந்தியா

தோ்தல் விதிமீறல் வழக்கு: ஜெயப்ரதாவுக்கு ஜாமீன்

நடிகையும் பாஜக தலைவருமான ஜெயப்ரதாவை கைது செய்ய எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் முன் அவா் புதன்கிழமை ஆஜரானாா்.

DIN

நடிகையும் பாஜக தலைவருமான ஜெயப்ரதாவை கைது செய்ய எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் முன் அவா் புதன்கிழமை ஆஜரானாா். இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது உள்ளூா் அதிகாரிகளின் ஒப்புதல் பெறாமல் தோ்தல் பேரணியை அவா் நடத்தியதால், தோ்தல் நடத்தை விதிமுறைகளை அவா் மீறியதாக உத்தர பிரதேசத்தின் ராம்பூா் மாவட்டத்தில் உள்ள இரு காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யப்பட்டது.

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யான நடிகை ஜெயப்ரதா, 2019 மக்களவைத் தோ்லுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தாா். அத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அவா் தோல்வியடைந்தாா்.

ராம்பூரில் உள்ள எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தின்முன் ஆஜராவதை ஜெயப்ரதா தொடா்ந்து தவிா்த்து வந்தாா்.

இதையடுத்து, ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவை அவருக்கு எதிராக நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்தது. இந்நிலையில், புதன்கிழமை நீதிமன்றத்தின்முன் ஆஜரான அவா், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தனது மனுவை தாக்கல் செய்தாா். இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT