இந்தியா

2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகள்: குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்

DIN

 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) வழங்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த சமூகமாக மாற்றும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார். 

அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த டிஜிட்டல் இந்தியா விருதுகள் இந்த முறை, முதல் முறையாக தொழில் தொடங்கி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT