இந்தியா

3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் தில்லியில் அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். 

DIN


மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் தில்லியில் அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். 

நாகலாந்து மாநில பேரவையின் பதவிக் காலம் வரும் மார்ச் 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல மேகாலயா மாநிலத்தின் பேரவை பதவிக் காலம் மார்ச் 15 ஆம் தேதியுடனும், திரிபுரா மாநில பேரவையின் பதவிக்காலம் மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 

இதையடுத்து இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று புதன்கிழமை அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் குஜராத், ஹிமாச்சலில் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவிக்கிறது. 

அதாவது, நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இன்று புதன்கிழமை(ஜன.18) மதியம் 2.30 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நாகலாந்தில் பாஜக-நாகா மக்கள் முன்னிணியின் கூட்டணி ஆட்சியும், மேகாலயாத்தில் பாஜக-தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியும் மற்றும் திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

SCROLL FOR NEXT