நாட்டில் வெறுப்பு, வன்முறை மற்றும் அச்சம் நிறைந்த சூழலை பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகள் உருவாக்கி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாபின் பதான்கோட்டில் கடைசி நாளான நேற்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில்,
ஒரு மதத்தை மற்றொரு மதத்துக்கு எதிராகவும், ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொரு ஜாதியையும், ஒரு மொழியை மற்றொரு மதத்துக்கு எதிராகவும் பாஜக போராடச் செய்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
நாட்டில் அச்சம் நிறைந்த சூழலை உருவாக்குகிறார்கள்.
அவர்களின் திட்டங்கள் அனைத்தும் ஏதோவொரு பயத்தை ஏற்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.