முகப்பு
இந்தியா

சட்டம், ஒழுங்கை மேம்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் கவனம் செலுத்தவேண்டும்: கேஜரிவால்

நகரின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் சக்சேனா கவனம் செலுத்துமாறு முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். 

Updated On : 20 ஜனவரி, 2023 at 1:38 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:15 AM

நகரின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் சக்சேனா கவனம் செலுத்துமாறு முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு அவர் எழுதிய கடிதத்தில், 

நகரின் சட்டம் ஒழுங்கு நிலைமையை விடத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளில் சக்சேனா தலையிடுவதாகவும், இதனால் மக்கள் மத்தியில் கோபம் இருப்பதாகவும் கேஜரிவால் குற்றம் சாட்டினார். 

Advertisement

சமீபத்தில் ஆளுநர் மாளிகையில், ஆத் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு சந்திக்க அனுமதி மறுத்து அவமதித்தாக அவர் கூறினார். 

நகரின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் கவனம் செலுத்தவும் என்று அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக தவறான மற்றும் இழிவான அறிக்கைகளை வெளியிட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையேயான கடுமையான அதிகார மோதலின் மத்தியில் கீழ்நிலை சொற்பொழிவை நாடுவதாகவும் கேஜரிவாலுக்கு சக்சேனா கடிதம் எழுதினார். 

மேலும், கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவை ஒரு கூட்டத்திற்கு அழைத்ததாகவும், ஆனால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அவரைச் சந்திக்குமாறு முதல்வர் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.