இந்தியா

தற்கொலையல்ல.. திட்டமிட்டக் கொலை: 7 பேர் மரணத்தில் திடீர் திருப்பம்

DIN

புனே: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மரணத்தில், திடீர் திருப்பமாக, அவர்களை திட்டமிட்டுக் கொலை செய்தக் குற்றத்துக்காக நான்கு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனே மாவட்டம் தௌந்த் அருகே ஓடிக் கொண்டிருக்கும் பிமா ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

முதலில், தற்கொலையாகக் கருதப்பட்ட இந்த சம்பவத்தில், மரணம் அடைந்த 50 வயது நபரின் உறவினர்கள் நான்கு பேர்  கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரின் மகன் சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். ஆனால், அது சாலை விபத்து அல்ல, தனது உறவினர்தான் கொலை செய்துவிட்டதாக அவர் கருதினார். இதனால், அந்த நபர் தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து திட்டம் தீட்டி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும், ஜனவரி 18ஆம் தேதி, 50 வயது நபர், அவரது மனைவி, மகள், மருமகன், மூன்று பேரப்பிள்ளைகளை பிமா ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT