முகப்பு
இந்தியா

காங்கிரஸ் பிரசார இயக்கம் தொடக்கம்

காங்கிரஸின் ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ என்ற பிரசார இயக்கத்தை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளத்ரி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 2:10 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

காங்கிரஸின் ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ என்ற பிரசார இயக்கத்தை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளத்ரி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தில்லியிலுள்ள 280 பிளாக்குகளிலும் இந்த பிரசாரம் இயக்கம் செல்கிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வீடு தேடி சென்று நன்றி கூறப்படும் எனவும், இதில் காங்கிரஸ் நிா்வாகிகளும், தொண்டா்களும் பங்கேற்பா் என்றும் அனில் செளத்ரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், இந்த ‘ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்’ இயக்கம் தில்லியிலுள்ள 13,000 வாக்குச்சாவடிகளில் இருந்தும் தொடங்கும். ஒற்றுமை பயணத்தின்போது பொதுமக்களின் கவலைகளை ராகுல் காந்தி முன்னிறுத்தினாா். ஆனால், பாஜகவின் சா்வாதிகார ஆட்சியால் பொதுமக்களின் மனக்குறைகளைத் தெரிவிக்க பெரும்பாலானவா்கள் அஞ்சுகின்றனா். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மக்கள் மனதில் பாஜக பயத்தை விதைத்துவிட்டது’ என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.