பிகாரில் மத்திய அமைச்சரின் சகோதரர் மருத்துவமனையில் மரணம்: மருத்துவர்கள் இல்லாததே காரணமா?
பிகாரில் மத்திய அமைச்சர் அஷ்வின் சௌபேயின் சகோதரர் நிர்மல் சௌவே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை உயிரிழந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியமே காரணம்
பிகாரில் மத்திய அமைச்சர் அஷ்வின் சௌபேயின் சகோதரர் நிர்மல் சௌவே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை உயிரிழந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என நிர்மல் சௌவே உறவினர்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிகாரின் பாகல்பூர் நகரின் ஆதம்பூரில் மத்திய அமைச்சர் அஷ்வின் சௌபேயின் சகோதரர் நிர்மல் சௌவே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதானி குழுமத்தில் எல்ஐசியின் ரூ. 74 ஆயிரம் கோடி, ஸ்டேட் வங்கியின் 40% நிதி!!
Advertisement
Advertisement
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மாயாகஞ்ச் மருத்துவமனையில் அனுமதித்தனர். கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூத்த மருத்துவரின் தேவையான சிகிச்சைக்கு பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சௌபேயின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாதது மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த பாகல்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் சௌத்ரி, சௌபேயின் உறவினர்களை சமாதானம் செய்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களை தப்பிச் செல்லும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சௌத்ரி உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அசிம் கிஆர் தாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.