அந்தமான் நிகோபாரில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபாரில் திங்கள்கிழமை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
புதுதில்லி: அந்தமான் நிகோபாரில் இன்று (திங்கள்கிழமை) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியது.
இதனால் பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
Advertisement
Advertisement