இந்தியா

2வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3!

DIN

சந்திரயான்-3 விண்கலத்தை 2வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் குறைந்தபட்சம் 226 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 41,603 கி.மீ. தொலைவும் கொண்ட புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2வது புவிவட்ட சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் ஆக. 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT