இந்தியா

பெங்களூருவில் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி!

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர். 

DIN

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. 

இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் இன்றும், நாளையும்(ஜூலை 17-18) இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்பட 24 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

காங்கிரஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகிய மூவரும் பெங்களூரு வந்துள்ளனர். 

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரை காங்கிரஸ் தலைவர்களை வரவேற்றனர். 

இந்த கூட்டத்தில் முதல் நாளில்(இன்று) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேறவில்லை. நாளை(செவ்வாய்க்கிழமை) அவர் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT