கோப்புப்படம் 
இந்தியா

43 ஆண்டுகளில் இல்லாத கனமழை: வைஷ்ணவி தேவி கோயிலின் புதிய பாதை மூடல்!

ஜம்மு-காஷ்மீரின், ரியாசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

DIN

ஜம்மு-காஷ்மீரின், ரியாசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

கத்ரா நகரில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. 

சீரற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகள் பழைய பாதையான திரிகுடா மலையில் சென்று கோயிலை அடைய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

வைஷ்ணவி தேவி சன்னதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாம் கத்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் 315.4 மிமீ மழை பெய்துள்ளது என்று அக்கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷுல் கார்க் தெரிவித்தார். 

முன்னதாக, ஜூலை 31, 2019ல் கத்ராவில் சுமார் 292.4 மிமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இத்தாலி அணி விவரம்!

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்! - அண்ணாமலை

ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றத்தைத் தணிக்க பிராந்திய நாடுகள் பேச்சு: பாகிஸ்தானுக்கு அழைப்பு!

அமெரிக்க வரிக் குறைப்பால் நாட்டில் எந்தெந்தத் துறைகளுக்கு பலன்?

டி20 உலகக் கோப்பைக்கான அயர்லாந்து அணி விவரம்!

SCROLL FOR NEXT