முகப்பு
இந்தியா

வந்தே பாரத் மீது கல்வீசியதால் ரூ.55 லட்சம் இழப்பு!

வந்தே பாரத் ரயில்கள் மீது பல்வேறு கல்வீச்சு தாக்குதலால் ரயில்வே துறைக்கு ரூ. 55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

வந்தே பாரத் ரயில்கள் மீது பல்வேறு கல்வீச்சு தாக்குதலால் ரயில்வே துறைக்கு ரூ. 55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 50 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கல் மீது அவ்வப்போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்துவதால் ரயிலின் கதவுகளும், ஜன்னல்களும் சேதமடைகின்றன.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதில்:

“வந்தே பாரத் ரயில்கள் மீது கடந்த 2019 முதல் 2023 ஜூன் மாதம் வரை நடத்தப்பட்டு கல்வீச்சு சம்பவத்தால் ரயில்வேவுக்கு ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 151 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் எந்தவொரு பயணிகளும் காயமடையவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →