முகப்பு
இந்தியா

டெங்கு பரவல் : தில்லி முதல்வர் ஆலோசனை!

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தில்லியில் இந்த ஆண்டில் ஜூலை 22 நிலவரப்படி மொத்தமாக 187 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது அதிகமானோர் தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: டெங்கு பரவலை தடுப்பது தொடர்பான கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் மதியம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். தில்லியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.