இந்தியா

7-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

DIN

நாடாளுமன்ற மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் இன்று நாள் முவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் 7-வது நாளாக இன்று முடங்கியது. 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவையில் நிகழ்வுகள் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் விரிவுபடுத்தப்பட்ட ஆா்.டி. விவாஹா ஜுவல்லா்ஸ் தொடக்கம்

பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீா் திறப்பு

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT