இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: பிகாரைச் சேர்ந்த 35 பேர் பலி!

ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

பிகார் பேரழிவு மேலாண்மைத் துறையின் தகவலின்படி, 

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். 22 பேர் மாயமாகியுள்ளனர். 

இறந்தவர்களில் ஒன்பது பேர் முசாபர்பூர் மாவட்டம், மதுபானி- 7, பகல்பூர் -4, பூர்னியா மற்றும் கிழக்கு சாம்பரான் -2 தலா, நவாடா -2, மேற்கு சாம்பாரன் -2, தர்பங்கா -2, ஜமுய் -2, சமஸ்திபூர் -1, பாங்கா -1 மற்றும் பெக்சாராரை -1 என அடையாளம் காணப்பட்டுள்ளன. 

பாலாசோர், பத்ராக் மற்றும் கட்டாக் ஆகிய வெவ்வேறு மருத்துவமனைகளில் காயமடைந்த 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 110ஐக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT