அமலாக்கத் துறை சோதனை: சரத் பவார், கேஜரிவால் கண்டனம்
சென்னை தலைமை செயலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜி மீதான சோதனை மூலம் அமலாக்கத் துறை கொண்டு தென் மாநிலங்களை பழிவாங்க பாஜக தொடங்கியுள்ளது என விமர்சித்துள்ளார்.
இதேபோன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் அமலாக்கத் துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாஜக கேடு விளைவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 பேர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணிநேரம் சோதனை நடைபெற்றது.