இந்தியா

ஹரியாணாவில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்!

ஹரியாணாவில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் 2-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

ஹரியாணாவில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி விவசாயிகள் 2-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தில் சூரியகாந்தி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என குருக்ஷேத்ரா பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல வழிகளில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி குருக்ஷேத்ராவில் விவசாயிகள் 2-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவரான ராகேஷ் திகைத் தலைமையில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT